Friday, February 14, 2014

TKS

தோழர்களேதோழியர்களே 

வணக்கம். அனைவருக்கும் போராட்ட வாழ்த்துக்கள்.  2 நாள் சம்பள இழப்பை தவிர வேறு எதாவது பிரயோசனம் உண்டா? என்பதுதான் அனைவருடைய உள்ளத்திலும் உள்ள கேள்வி? இது வரை அரசு எந்த நடவடிக்கையோ, பேச்சு வார்த்தைக்கோ அழைக்கவில்லை. ஆனால், நமது போராட்டம் வீணாகி விடாது என்பதும் உண்மை.

போராட்டத்தை நாம் விதைத்திருக்கிறோம். விதை முளைப்பதற்கு சிறிது நேரமாகலாம். அதன் வளர்ச்சி கண்ணுக்கு தெரிய நேரமாகலாம். விதைத்தவர்கள் மறந்து விடலாம். உறங்கியும் விடலாம். ஆனால் விதைகள் ஒரு நாளும் உறங்குவதில்லை. பலன் கிடைக்கும் வரை போராடுவோம். வாழ்த்துக்கள்.

நமது உரிமைகளுக்காகவும் , கோரிக்கைகளுக்காகவும் நமது சங்கத்தின் 
அறைகூவலுக்காகவும் பொறுமைகாத்து  சம்பள  இழப்பையும் பொருட்படுத்தாமல்  2 நாள் வேலைநிறுத்தத்தில்  பங்கேற்று    ஊழியர்களின்  ஒற்றுமையை   மத்திய அரசுக்கு எடுத்துக்காட்டிய தோழர் / தோழியர் அனைவருக்கும்   நமது சங்கத்தின்  வீர வணக்கங்கள்  !



நமது   மத்தியஅரசு   ஊழியர்களின்   மகாசமேளனத்தின் அறைகூவலை  ஏற்று  15 அம்ச கோரிக்கையை   வலியுறுத்தி   48    மணிநேரம்
 நடைபெற்ற    வேலைநிறுத்தத்தில்  முழு அளவில் கலந்துக்கொண்ட
  நமது  கோட்டத்தின்   அனைத்து   தோழர்களுக்கும்,
 தோழியர்களுக்கும்   கும்பகோணம்   கோட்டத்தின் JCA  சார்பாக 
நன்றியை     தெரிவித்துக்கொள்கிறோம். 


      NFPE P3,P4,GDS(NFPE)
-- KUMBAKONAM

No comments:

Post a Comment