Thursday, December 24, 2020

TN circle final answer key of gds to mts exam 2020

 Final answer key of Competitive Examination for recruitment to the cadre of MTS from GDS held on 11/10/2020 (Sunday) for the vacancy years 2018,2019 & 2020 – Tamilnadu Circle.View

Thursday, December 3, 2020

 

GDS :: Issue of counting of GDS service - for grant of pension to Gr.D / MTS .. No relaxation - decided by PSB ...............


GDSஆக இருந்து இலாகா ஊழியர் ஆனவர்களுக்கு பென்சன் வழங்க சர்வீஸ் குறைந்தால் ஏற்கனவே 3 மாதங்கள் மட்டும்  ரிலாக்சேசன் வழங்கி பென்சன் தரப்படுவது தொடரும்.மேற்கொண்டும் ரிலாக்சேசன் வழங்கப்பட மாட்டாது என்பது மிகுந்த வருத்தமானது.அதே நேரத்தில் அனைத்து பென்சன் கேஸ்களையும் உடனடியாக முடித்து அதற்குரிய பென்சன் தர உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட் கூறியபடி ரிலாக்சேசன் சாதகமாக வழங்கிட வேண்டி அனைவருமே வலியுறுத்தி பெற வேண்டும்.🙏

 


Friday, November 27, 2020

TN circle postman 2020 notification announced

 

Competitive Examination for recruitment to the cadre of Postman and Mail Guard from eligible MTS and GDS for the vacancy year 2020 -Tamilnadu Circle

Holding of Limited Departmental Competitive Examination amongst MTS and competitive exam restricted to GDS for filling up the posts of Postman/Mail Guard for the vacancy of the year 2020 (01.01.2020 to 31.12.2020) to be held on 10.01.2021 (Sunday)- Reg.



Download

Saturday, November 14, 2020



அன்பு அஞ்சல் சொந்தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Monday, October 12, 2020

 

Regularisation of qualified workers appointed against sanctioned posts - Uma Devi judgement - facts/clarification ---


தமிழ்நாடு சர்க்கிளில்  10-4-2006 க்கு முன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக GDS santioned post-களில் அவுட்சைடராக வேலைபார்த்து வருபவர்களுக்கு இதை  உடனடியாக அமுல்படுத்திட முன்வர வேண்டும்.




 









Monday, October 5, 2020

 

UIDAI :: Prioritising Child enrolment and mobile update -- Aadhaar services through IPPB using CELC ...............

 


 

Post Office Savings Scheme (POSB) & Jan Suraksha Scheme information ( From 01-10-2020 to 31-12-2020)

 


//COPY//-SAPOST

Wednesday, September 2, 2020

TN postal circle gds online recruitment notification announced.

 தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராமபுற அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு ஆட்களை ஆன்லைனில் தேர்ந்து எடுக்க உள்ளனர். விண்ணப்பதார்ர் பத்தாம் வகுப்பில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில்  தேர்ந்து எடுக்கப்படுவர்.


காலி பணியிடங்கள் எண்ணிக்கை - 3162

தகுதி:10 வகுப்பு தேர்ச்சி,60 நாட்களுக்கு குறைவில்லாத கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ்( 10th,12th மற்றும் மேல் படிப்புகளில்(U.G,P.G) computer subject படித்திருந்தால் சான்றிதழ் அவசியம் இல்லை.


வேலையின் பெயர் :கிராம அஞ்சலக அதிகாரி(BPM),

கிராம தபால்காரர்(ABPM/DAK SEWAK )

வயது:18 to 40

சம்பளம்:10,000 to14500

தேர்வு :கிடையாது

Apply செய்யும் முறை:online

Website : https://appost.in/gdsonline 


Fees:Rs.100..(Exemption for Women,SC/ST candidates,and Physically handicapped persons)


Last date:30.09.2020

கீழ்கண்டவைகளை இணைப்பது முக்கியம்.



Sunday, August 30, 2020

Tn circle gds online notification....reg

Tamilnadu circle Gds online (cycle -III)  recruitment notification will be  announced below website shortly.......

www.appost.in



Monday, August 17, 2020

To Finalize Pension Case not go back to a period 24 months....

 

To Finalize Pension Case not go back to a period 24 months preceding the date of retirement for raising observations relating to pay fixation etc-Directorate instruction to All Chief Postmaster General.

No.100-1/2020-Pension
Government of India
Ministry of Communications
Department of Posts
(Pension Section)

Dak Bhawan, Sansad Marg.
New Delhi-1 10001
27th July, 2020

To

Gencral Manager (Finance)
Shamnath Marg.
Delhi-54

Sir,

There are number of instances brought to the notice of this Office wherein pensioners retiring from this Directorate have to suffer financial loss as well as harassment due to delay in finalization of their pensionary benefits on account of observations raised by DAP relating to pay fixation on account of MACP/stepping up of pay ctc. which date back to many years. In some cases it relates to even 10 years prior to the date of retirement.

2. With a view to end this situation, clarification was sought from the Deptt. of Pension and Pensioner’s Welfare as to whether. in light of Rule 5(b) (v) of CCS(Pension) Rules, 1972 there is any provision that prevents Accounts Officer to raise observations related to the period prior to the 24 months from the date of retirement. DoP&PW has clarified that Rules are very clear and provisions available in Chapter 7 of the Civil Accounts Manual for the [1OD and Pay and Accounts Officer. ete may be brought to the notice of the Accounts Officer in this regard. Relevant ponion of Chapter 7 of the Manual is reproduced below:-

“7.3.2 Role of Pay and Accounts Officer:

The Pay & Accounts Officer on recciving the pension papers, will verify the service records and apply prescribed checks with reference to the applicable Pension rules. and assess the amount of pensionary benefits. The PAO concerned, keeping in mind that the intention is not a total overhaul or audit of the entire Service Book or records, but only a scrutiny limited to the immediate purpose on hand, that is the preparation of the pension papers. Any deficiency or imperfection or omission which still remains in the service records will be ignored at this stage and the determination of the qualifying service will be proceeded with on the basis of entries in the service records, whatever the degree of perfection to bring them by that time. However, for any such check of the correctness of past emoluments, the check should be the minimum that is absolutely necessary, and it should in any case not go back to a period earlicr than a maximum of 24 months preceding the date of retirement………..”

3. In view of the clarification received from the DoP&PW, it is requested that Officers in DAP, Delhi may please be directed to adhere to the Rules in this regard and should in any case not go back to a period earlier than a maximum of 24 months preceding the date of retirement for raising observations relating to pay fixation etc as per the guidelines.

Yours faithfully,

( Tarun Mittal )
Asstt. Director General (Pension)

Copy to:-

1. All the Chief Postmasters General.
2. Sr. DDG(PAF).
3. ADG(Admin./ADG(SPG).


Sunday, August 16, 2020

Gds to MTS,postman,PA date of appointment issues reg.

 GDS to Postman, நியமனத்தை நேரடி நியமனமாக கருத வேண்டும் என்று  சுப்ரீம் கோர்ட் CA No's 90/2015 and 91/2015  தீர்ப்பளித்தது.அதை சுட்டி காட்டி வெளியான Dte.F.No.02-18 /2016-SPB-I dated  25-11-2016 அன்றைய டைரக்ரேட் ஆர்டரும் GDS to MTS, postman, PA நியமனங்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளது.

தற்போது  கோவா மாநிலத்தில்  O/o SSPoS Goa/B-1/26/2020 dated at panaji the 17-6-2020 அன்று 20-12-2010 -ல் நியமிக்கப்பட்டதாக PA-க்களுக்கு  முன் தேதியிட்டு அவர்களது பயிற்சி காலத்தையும் சேர்த்து date of appointment கொடுத்துள்ளனர்.அதே போல O/o SPoS RMS 'F' Dvn memo no.B 1/Rectt./SA-2009 & 2010/corr./2019 dated  at Nagpur 27-6-2019 ஆர்டரிலும் 3-1-2011 தேதியிட்டு கொடுத்துள்ளனர்.

நமது சர்க்கிளிலும் 2015 ஆம் ஆண்டு வெளியிலிருந்து தேர்வான MTS, Postman-களுக்கு மட்டும் அவர்களது  பயிற்சி காலத்தை சேர்த்தே சம்பளம் வழங்கியவர்கள்  gds to MTS, postman, PA ஆனவர்களுக்கு மட்டும்  கொடுக்க மறுத்த  பயிற்சி கால   சம்பளத்தை தற்போது வழங்கி, date of appointment-ம்  மாற்றி வழங்கிட கேட்க வேண்டுகிறேன்!




அஞ்சல் சொந்தங்களுக்கு

இனிய சுதந்திரதின 

நல்வாழ்த்துக்கள்.






Friday, August 14, 2020

Gds surplus. Reg...

 

போஸ்ட்மேன் ஆகட்டும், PA ஆகட்டும் சர்ப்ளஸ் விசயத்தில் GDS ஊழியர்களுக்கு வாங்கி தராமல் அப்பட்டமான துரோகத்தை செய்தது தமிழக NFPE  P3-தான் என்பதை  தெரிந்து இருந்தும் சிலர் கிணற்று தவளையாக தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்..எனவே FNPO GDS ஊழியர்கள் தெரிந்து கொள்ள இந்த விளக்கத்தை பதிவிடுகிறேன்.


முன்பு 1989 போஸ்ட்மேன் தேர்வு விதியில் சர்ப்ளஸ் தொடர்பாக ரீஜின் அளவில் நிரப்பிட கூறியிருந்தது. அதன்பிறகு வந்த 2010 தேர்வு விதியில் சர்ப்ளஸ் பற்றி எதுவும் கூறப்படாததால், பிறகு  2012 -ல் சர்ப்ளஸ் குறித்து  neighbouring division என்று  தேர்வு விதியில் திருத்தம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 2015 போஸ்ட்மேன் தேர்வு முதலே சர்ப்ளஸ் என்பது மாநில அளவிலே கொடுத்து வருகிறார்கள்.


ஆனால், நமது சர்க்கிளில் ரீஜின் அளவில் எடுப்பதால் சென்னை போன்ற ரீஜினில் உள்ளவர்களுக்கு ( அங்கே சில டிவிசனில் ஒரு GDS ஊழியர்கள் கூட பணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).  அதுவும் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு கூட ஈசியாக வேலை கிடைத்து வந்தது. ஆனால் மற்ற டிவிசனில் மிக மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதாவது மாநில அளவில் சர்ப்ளஸ் லிஸ்ட் எடுத்தால் முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு கூட வேலை கிடைக்காத நிலை இருந்து வந்தது. அப்போது gdsnfpe kumbakonam dvn secretary ஆக இருந்தேன்.பலமுறை இது குறித்து வலியுறுத்தி வந்தேன். 


ஏன் இதை  NFPE-ல் இருந்த P4,P3 மாநில செயலர்கள்  பேசி,கேட்டு  வாங்கவில்லை. நான்,  தோழர் JR சார், தன்ராஜ் சார், வீரமணி சார், FNPO சுகுமாறன் சார் உள்ளிட்டவர்களோடு  CPMG அலுவலகத்தில் விவாதித்திள்ளோம். அந்த  சூழ்நிலையில் தான் FNPO  சுகுமாறன் சார் இதை கையிலெடுத்து பேசி வந்தார்.  


 நமது  கும்பகோணம் , கோவில்பட்டி, திருப்பத்தூர் டிவிசனை சேர்ந்த GDS ஊழியர்கள் போஸ்ட்மேன் தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் குஜராத்தில் நிரப்புவது போல் மாநில அளவில் சர்ப்ளஸ் நிரப்பாததால் 2015 ஆண்டு முதலே GDS to postman இடங்களை இழந்து வந்ததை மறக்க வேண்டாம்.


அது போல  முந்தைய 2010,2012 Gds to PA  தேர்வுகளில்  Dte.Letter. No-60-127/85-SPB-I dated on 27.07.1989 படி  சர்ப்ளஸில் நிரப்பியுள்ளனர்.  அந்த 2010,2011 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மொத்தமே 4 பேர்கள் மட்டும் தான். அதில் 3 பேர்களுக்கு அவர்களது சொந்த டிவிசனில் அவர்கள் சார்ந்த OBC,SC, இடஒதுக்கீடு இடங்கள் இல்லாமல் வேறு டிவிசனில் இருந்தாலும் தேர்வு எழுத அனுமதித்து ,தேர்வில் வெற்றி பெற்றதும்  அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் படி  அவர்களை வேறு டிவிசன்களில் உள்ள OBC,SC இடங்களில்  ஒதுக்கீடு செய்து  நிரப்பினர்.


 ஆனால், அதன்பிறகு நடந்த 2013,2014 gds to PA தேர்வில் இது போல்  நிரப்ப மறுத்தனர். இதை  NFPE P3 கேட்க மறுத்ததால் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தோம். gdskumbakonam website-லும் இது கோரிக்கையாக வந்தது


 கும்பகோணம், நாகப்பட்டினம், விருத்தாசலம், தஞ்சாவூர் GDS ஊழியர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சர்ப்ளஸ் குறித்து  டைரக்ரேட்டை எதிர்தரப்பாக குறிப்பிட்டு கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தனர். உண்மையை உணர்ந்து கொண்ட  FNPO தியாகராஜன் சார் டைரக்ரேட்டுக்கு கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து தான் MTS, Postman புதிய தேர்வு விதிகளில் மிக தெளிவாக சர்ப்ளஸ் தொடர்பாக விளக்கி உள்ளனர் என்பதை மறவாதீர்கள்.


அதன்பிறகு வந்த 2015,2016, 2017,2018 gds to PAதேர்வில் இது போன்ற சூழல் வந்த போது தேர்வுக்கான விண்ணப்பங்களை வாங்க மறுத்தனர்.டைரக்ரேட் கூட முதலில் அப்படி சர்ப்ளஸ் தர முடியாது என்று கூறியது. NFPE யூனியனை சார்ந்தவர்களோ gds to PA  தேர்வில் சர்ப்ளஸ் இல்லையென்று வாட்ஸ்அப் குரூப்புகளில் வாதிட்டு வந்தனர்.. நான் பலமாக எனது எதிர்ப்பினை தெரிவித்து  ஆதாரங்களோடு சுட்டி காட்டி வந்தேன். 


 உடனடியாக FNPO P3 சரவணன் சார் கடிதம் எழுதி பல நாட்கள் விளக்கி கூறி நீண்டதொரு போராட்டத்தை நடத்திய பின்பே  ஏற்கனவே இருந்த Dte.Letter. No-60-127/85-SPB-I dated on 27.07.1989 படி   LGO உள்ளிட்ட gds to PAதேர்வுக்கு சர்ப்ளஸ் முறை வழங்குவதாக தெரிவித்தது. 


முதன்முறையாக தற்போது RMS காலியிடங்களிலும் நூற்றுக்கணக்கான GDSஊழியர்கள் PA/SA பணிநியமனம் பெற்றுள்ளனர். Mailguardஆக வர உள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க போராடிவர்கள் FNPO சரவணன் சார்,சுகுமாறன் சார்  தான் என்பதை மறவாமல் சர்ப்ளஸில் வரும் தோழர்கள் அந்தந்த பகுதியில் உள்ள  FNPO யூனியனில் இணைய வேண்டுகிறேன்!

Wednesday, August 12, 2020

Discuss about GDS ,postman issues with FNPO P4 circle secretary reg.

 அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே!

நமது FNPO P4 மாநில செயலாளரிடம் GDS,Postman உள்ளிட்ட பிரச்சனைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளேன்.


1. GDS to postman surplus ரிசல்ட் பல மாதங்களாக மீண்டும் மீண்டும் எதாவது ஒரு காரணத்தை கூறி இழுத்தடிக்கப்பட்டு வருவதால் GDS ஊழியரிலிருந்து வந்தவன் என்பதால்   இதை எதிர்பார்த்து காத்திருக்கும் GDS ஊழியர்களின் கவலையை FNPO P4 மாநில செயலாளர் சுகுமாறன் அவர்களிடம் எடுத்து கூறினேன்!


அவரும் நான்  ADஅவர்களிடம் கூறியுள்ளேன்.இந்த வாரம் மேலும் தாமதமின்றி ரிசல்ட் வந்துவிடும். நான் அதை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.ரிசல்ட் போடுவது ரகசியமான நடைமுறை.அந்த வேலை நடைபெறும் அறைக்குள் தினமும் அங்கே சென்று கேட்டதாக மற்றவர்கள் போல் என்னால் கூற முடியாது. நம்புங்கள் கண்டிப்பாக போட்டு விடுவர் என்றார்.


2. Postman to PA  LGO 2019 தேர்வுக்கு தேர்வு விதியில் கூறப்பட்டபடி 50% காலியிடங்களை முழுவதுமாக ஒதுக்காததால் ஏற்பட்ட unandicipted vacancies பிரச்சனையில் டைரக்ரேட் இடமிருந்து ஆர்டர் இன்னும் வாராதது குறித்து வலியுறுத்திய போது 22-7-20 அன்றே மாநில நிர்வாகம் இது தொடர்பாக அனைத்து PMG-களுக்கும் மெயில் அனுப்பி இருந்ததாகவும், கோவை, திருச்சி மண்டலம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால் சரியாக எடுக்கப்படாத காலியிடங்களை பெற முடியவில்லை என்று AD recruitment அவர்கள் கூறியதால் இது தொடர்பாக DPS HQ அவர்களிடம்  முறையிட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே யூனியன் சார்பாக டைரக்ரேட்டிலும் முதன் முதலில் கடிதம் கொடுத்து உள்ளதையும் குறிப்பிட்டு இந்த மாதம் நல்ல செய்தி வரும் என்றார்.


3. பல டிவிசன் GDS ஊழியர்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வந்த சேலம் செக்யூரிட்டி பாண்ட் தொடர்பாக பிடித்த பணத்தை திரும்ப தரவும் ,10 தவணைகளில் பிடிக்க வேண்டியும் கடிதம் எழுதியுள்ளதை குறிப்பிட்டார்.


4. Gds transfer-ல் ஒவ்வொரு டிவிசனும்  பலவாறு கூறி விண்ணப்பம் பெற்றதையும், இன்னும்  பணியிடமாற்றம் ஆர்டர் வாராதது குறித்தும்  வலியுறுத்தி உள்ளேன்.பேசுவதாக கூறியுள்ளார்.


5. TRCA தொடர்பாக புள்ளிக்கணக்கீடு சரியாக எடுக்கபடாததால்  சம்பள குறைவாக வருவதை கேட்டதற்காக ஒரு டிவிசனில் EDDA ஊழியரை put off duty செய்து பிறகு removed service கொடுத்த SP-ன் அதிகார அத்துமீறலை சம்பந்தப்பட்ட மேலதிகாரிஅவர்களிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார். 


6.  LGO 2019 PH ரிசல்ட் வெளியிட கேட்டுள்ளதாகவும் அது தொடர்பான ஆணை விரைவில் வரும் என்பதை தெரிவித்தார்.இதன் மூலம் 2019 gds to pa தேர்வு எழுதி வெற்றி பெற்ற சிலருக்கு PA வாய்ப்பு கிடைக்கும்.


7. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டி காட்டி டைரக்ரேட் gds to PA, postman, MTS நியமனங்களை நேரடி நியமனமாக கருத ஏற்கனவே கூறியிருந்தது.

 2010,2011ஆண்டு GDS to PA தேர்வில்  வெற்றிபெற்றவர்கள் மொத்தமே 4 பேர்தான். அதில் 3 பேர் வேறு மற்ற டிவிசனில் ஒதுக்கீடு பெற்று சர்ப்ளஸில் சென்றதை குறிப்பிட்டு,2013,2014- ல் மட்டும் சர்ப்ளஸ் இல்லை என்று மறுத்ததை மீண்டும் கையிலெடுத்து வாங்கிதர உறுதியளித்துள்ளார்.


8. முன்பு outsiderஆக இருந்து தற்போது GDSஆக இருக்கும் ஊழியர் ஒருவருக்கு வர வேண்டிய MTS வேலை  குறித்து தொடர்ந்து வலியுறுத்தியதால் தற்போது ஆர்டர்  வந்து உள்ளதையும் குறிப்பிட்டார்.


9. Gds to postman தேர்வில் EWS தொடர்பான இடங்கள் சரியாக எடுக்கப்படாதது குறித்து  சரிபார்த்து பிறகு எடுப்பதாக கூறி உள்ளார்.


10. மெயில் ஓவர்சீஸ், சார்டிங் போஸ்ட்மேன் பணியிடங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப கோருவதாக கூறியுள்ளார்.


 ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த கொரானா சூழலில் வீட்டிலுள்ளவர்கள் தடுத்தும் பாண்டிச்சேரியிலிருந்து  தனியாக காரை எடுத்து கொண்டு சென்னை வந்து நமது gds, postman ஊழியர்கள் பிரச்சனைகள் தொடர்பாக  CPMG அலுவலகத்தில் FNPO பொறுப்பாளர்களை அழைத்து கொண்டு சென்று  இவர் பேசியது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம்.மிக்க நன்றி சார்


Gds security bond recovery issue taken by FNPO P4 circle secretary reg.

 

Gds ஊழியர்களுக்கு இந்த கொரானா காலத்தில் செக்யூரிட்டி பாண்ட் கட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்து கஷ்டப்படுத்துவதை பார்த்து நமது FNPO P4 மாநில செயலராளர் சுகுமாறன் அவர்களே முன்வந்து CPMG-TN அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள விபரம் உங்கள் பார்வைக்கு.

சேலம் செக்யூரிட்டி பாண்டு தொகை 10,000 லிருந்து 1 இலட்சமாக உயர்த்தப்பட்டதால்  gds ஊழியர்களிடமிருந்து பத்தாயிரம் பிடித்து வருகின்றனர்.gds ஊழியர்கள் சம்பளமோ  ரூ.10,000/-, 12,000/- ,14,500/-  + D.A என்ற அடிப்படையில் பெற்று வருகின்றனர். சில டிவிசன்களில் பத்தாயிரம் பிடித்து விட்டனர். சில டிவிசன்களில் ரூ.3,000, 4,000 என்று அந்தந்த HPO-ல் பிடித்து வருகின்றனர்.

சம்பளத்தில் பிடிப்பது தொடர்பாக தகவலை  GDSஊழியர்களுக்கு தெரிவிக்கவில்லை.அவர்களுக்கும் செக்யூரிட்டி பாண்டுக்கான சம்பளபிடித்தம் பற்றி தெரியாது. அவர்கள் மாதக்கடைசியில்  சம்பளம் வாங்கும்போது தான்  தெரிந்து கொண்டனர்.இது தவறான நடைமுறை.

ஊழியர்களை கொரானா  பரவல் மிகவும் அச்சுறுத்தி வருகிறது.போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்து வருகின்றனர். தொலைதூரத்திருந்து அதிக பணம் செலவு செய்து தங்களுடைய அலுவலகம் வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று கூடுதலாக அவர்களது சம்பளத்தை பிடிப்பதால் அவர்களால் அதை  சமாளிக்க முடியாது.

எனவே, எங்களது யூனியன் நமது CPMG-TNஅவர்களை இந்த பிரச்சனையில் தலையிட்டு செக்யூரிட்டி பாண்டு தொடர்பாக பிடித்த பணத்தை மீண்டும் GDSஊழியர்களிடமே தருமாறும், கொரானா காலம் முடிந்தபின்  10 தவணைகளில்  அதனை பிடித்திட கேட்டுக்கொள்கிறது.இது நிச்சயம் GDSஊழியர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.இது தொடர்பாக சாதகமான ஆர்டரை அளிக்க வேண்டுகிறேன்.🙏

இப்படிக்கு

P.சுகுமாறன்

FNPO  P4  மாநில செயலாளர்

பாண்டிச்சேரி.


Sunday, August 2, 2020

Inspector Posts LDCE Examination 2019 and IP Exam Results 2020- GS NUR-C sent letter to the Member (P)Click here to read

Com. R Seethalakshmi no more..

Com. R Seethalakshmi, Ex General Secretary, AIPEU Postmen and MTS, passed away today evening. Sudden death of her came as a shock.  She was a commited unionist. May the soul rest in peace.

IPPB :: Quarterly SMS alert charges of Rs.10- plus GST w.e.f 1st August 2020 ...

This is to inform all the concerned that India Post Payments Bank has introduced quarterly SMS alert charges of Rs. 10/- plus GST w.e.f. 1st August 2020 for all the customers.
All customers account will be charged with SMS alert charges w.e.f 01.08.2020
 Note: At the end of Quarter ending September 2020, SMS alert charges will be recovered only for Aug and September 2020 on a pro-rate basis for 2 months. Thereafter SMS alert charges will be debited at the end of delivery quarter.

Friday, July 31, 2020

Today meeting with CPMG-TN for GDS to Postmen Surplus.,etc reg.

அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே! 
இன்று 31.07.2020 (வெள்ளி கிழமை) FNPO-NUPE/ P4 தமிழ்மாநில சங்கத்தின் சார்பாக, தமிழ் மாநிலச் செயலர் திரு. P.சுகுமாறன்  அவர்களும், CCR Region-ல் உள்ள நமது FNPO, NUPE / P4தமிழ் மாநில நிர்வாகிகளும் மதிப்புமிகு.CPMG TN அவர்களை நேரடியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினோம்.

1) கொரானா பாதிப்பு இன்னும் முற்றிலும் நீங்காத நிலையில் தமிழ் மாநிலம் முழுவதும் Postmen, MTS உட்பட அனைத்து அஞ்சலக ஊழியர்களுக்கும்   Roster அமல்படுத்த வேண்டும் என கூறினோம். 

 **பதில்* ->  ஆகஸ்ட் முதல் வாரத்தில் Roster அமல்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். 

2) 2019 ஆம் ஆண்டின் Unanticipated  PA  காலியிடங்களை 2019 ஆம் ஆண்டில் LGO தேர்வு எழுதிய ஊழியர்களுக்கு, 31.12.2020 முடிய கணக்கெடுப்பின்படி வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினோம். 
  *பதில்*>> இது சம்பந்தமாக பரிசீலித்து  சாதகமான முடிவு எடுப்பதாக கூறினார்.

3) GDS to Postman Surplus உடனடியாக வழங்குமாறு தெரிவித்தோம். 

*பதில்* >> ஆகஸ்ட் முதல் வாரத்தில் Surplus Result வெளியிடுவதாக தெரிவித்தார்.

4) 01.01.1996 முதல் தபால்காரர்களுக்கு வழங்கப்பட்ட 3050 ஊதிய அடிப்படையில் இன்னும் ஓய்வு பெற்ற பல தபால்காரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வு ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது பற்றி விவாதித்தோம்.  

     *பதில்*>> இது சம்பந்தமாக உடனடியாக General Manager, Postal Accounts அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

5) இராமநாதபுரம் கோட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் பள்ளி/கல்வி நிறுவனத் தலைவரிடம் பெறப்படும் Bonofide சான்றிதழுடன் Orginal Receipts சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கூறி CEA தொகை கடந்த ஆண்டிலிருந்து மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தோம். 

 *பதில்*>> DPS (SR) அவர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

6) கண்டிஜன்டு ஆக பணிபுரிந்து MTS ஆக பணிபுரிந்து வருபவர்களுக்கு OLD Pension scheme அமல்படுத்த வேண்டும் என கூறினோம். 

*பதில்>>* பரீசிலீத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

 7) பணியிலிருக்கும் பொழுது இறந்த அஞ்சலக ஊழியர்களின் வாரிசு வேலை குறித்து கேட்டோம்.

 *பதில்*>> Directorate. பதிலுக்காக காத்திருப்பதாகவும், கமிட்டி கூடி தகுதி உள்ளவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 8) நிலுவையில் உள்ள Medical Bill Claim செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கூறினோம்.

 *பதில்>>* ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து Medical Claims செட்டில் செய்வதாக தெரிவித்தார்.

 இப்படிக்கு பாசமிகு சகோதரர் P.சுகுமாறன் தமிழ் மாநில செயலாளர், அகில இந்திய உதவி பொது செயலாளர் FNPO-NUPE/ P4.

Tuesday, June 9, 2020

இன்று கும்பகோணம் டிவிசனில் mts unfilled,postman declained காலியிடங்களில் தேர்ந்தெடுக்ப்பட்டுள்ள 
கணேஷ்ராஜா Bpm,மாத்தூர் B.O, புவனேஸ்வரி EDDA, ஐய்யாவடி B.Oமௌலி ED packer,திருவிடைச்சேரி, திலகவதி,BPM,பம்ப்ப்படையூர், பாபுராஜ் நரசிங்கன்பேட்டை ஆகியோருக்கு வாழ்த்துக்கள் உங்களது போஸ்ட்மேன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.💐💐🤝🤝

Friday, June 5, 2020

Transfer Policy Guidelines Directorate clarifications.

PLI-RPLI :: Payment of PLI/RPLI through cheque ........





CLICK HERE  for related orders  dtd 01-02-2019  &  25-03-2014

DoP :: Measures regarding COVID-19 pandemic requirement ....





Welfare section of the Directorate (DoP) seeking suggestions from HoC for providing financial assistance to GDS under Welfare scheme during this COVID-19 pandemic  ..

Wednesday, June 3, 2020

DoP :: (Tentative) Calendar of Examinations scheduled to be held in the year 2020 .....




CLICK HERE   FOR DETAILS & COPY (12 pages)

Monday, May 4, 2020

அன்பார்ந்த GDS மற்றும் கேசுவல் லேபர்  தோழர்களே!

 டைரக்ரேட் ஆர்டர்.  F.No-37-33/2009-SPN-I dated  05-04-20-ல் ரத்னாவதி என்பவர் தொடர்ந்த OA.No.559/2018 வழக்கில் மதிப்பிற்குரிய CAT கோர்ட்டின் தீர்ப்பினை பின்பற்றி MTS தேர்வு விதியில் குறிப்பிட்ட
விகிதாச்சார படி MTS வேலைக்கு ஆட்களை சுழற்சி முறையில் நியமிப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

 கர்நாடக சர்க்கிள் கொடுத்த Letter No.LC/3-92/2018 dated ,6-1-20 மற்றும் 21-10-19படி இந்த ஆர்டர் போடப்பட்டது.

தற்போதைய MTSதேர்வு விதியில் GDS மற்றும் கேசுவல் லேபர்களை MTSஆக நியமிப்பது தொடர்பாக கீழ்கண்ட வழிமுறைகள் உள்ளன.

A)   50 % காலியிடங்களை ஜனவரி மாதம் 1-ம் தேதி அன்று 5 ஆண்டு சர்வீஸ் முடித்த GDS-களை அவர்களது சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில்MTSஆக நியமிப்பது.

B)  25 % காலியிடங்களை ஜனவரி மாதம் 1-ம் தேதி அன்று 3 ஆண்டு சர்வீஸ் முடித்த GDS-களை கொண்டு தேர்வு எழுத வைத்து  அதன் அடிப்படையில் MTSஆக நியமிப்பது.

C)   25 % காலியிடங்களை (1-9-93 அன்று பணியில் இருந்த) கேசுவல் லேபர்களின் சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில்MTSஆக நியமிப்பது.

ஒவ்வொரு ஆண்டும் போதுமான காலியிடங்கள் வராததால் அனைத்து மாநில நிர்வாகமும் ஒரு புதிய தேர்வு முறையினை  இனி பின்பற்ற வேண்டும். MTS தேர்வு விதியில் கொடுக்கப்பட்டுள்ள விகிதாச்சாரம் கிடைக்கும்படி  GDS மற்றும் கேசுவல் லேபர்களை சுழற்சி முறையில் MTS வேலைக்கு நியமிக்க வேண்டும்.

பாரா நம்பர் A,B,C-ல் கூறியபடி MTS காலியிடங்களை 2:1:1என்ற விகிதத்தில் பிரித்து கீழ்கண்டவாறு  நிரப்பிட வேண்டும்.

1.  ஒரு ஆண்டில் ஒரு காலியிடம் தான் வந்தால் அந்த 1 இடம் GDS சீனியாரிட்டிக்கு ஒதுக்கிட வேண்டும்.

2. அடுத்த ஆண்டில் 2 காலியிடங்கள் வந்தால் அந்த 2 காலியிடங்களில் 1 இடம் GDS சீனியாரிட்டிக்கும், மற்றொரு இடம்  LDCE தேர்வில் செலக்ட் ஆன GDS- க்கும் ஒதுக்கிட வேண்டும்.

3. அதற்கு அடுத்த வருடம் 3 காலியிடங்கள் வந்தால் அதில் முதலில் வரும் 1 இடம் கேசுவல் லேபர் சீனியாரிட்டிக்கும். மற்ற 2 இடங்கள் GDS சீனியாரிட்டிக்கும் ஒதுக்கிட வேண்டும்.

அதாவது முதலில் வரும் 1மற்றும் 2 காலியிடங்கள் GDS சீனியாரிட்டிக்கும் 3-வது  காலியிடம் LDCE தேர்வில் செலக்ட் ஆன GDS- க்கும் , 4-வது காலியிடம் கேசுவல் லேபர் சீனியாரிட்டிக்கும் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் திரும்ப திரும்ப  ஒவ்வொரு மாநில நிர்வாகமும் பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக 2019, 2020, 2021ஆண்டுகளில் எப்படி எடுக்க வேண்டும் என்ற மாதிரி வழிமுறை கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியாக ரிஜுஸ்தர் பராமரிக்க வேண்டும்.

எனவே ,கேசுவல் லேபர்ராக பணியாற்றி தற்போது GDSஆக இருப்பவர்களுக்கும், 1-9-93 அன்றைய தினம் பணியில் இருந்த கேசுவல் லேபர்ர்களுக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் MTSவேலை கிடைக்கும். வாழ்த்துக்கள் தோழர்களே!

Sunday, April 19, 2020

Tuesday, April 14, 2020








உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்💐🌹🌻🎄☘️🌿🌈💫🤝


Friday, March 20, 2020

அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே! நமது பாரத பிரதமரின் அறிவியல் பூர்வமான அறிவிப்பை  பின்பற்றி  இந்திய பற்றுள்ள நாம் அனைவரும் வீட்டிலேயே இருந்து கொரானா வைரஸ் பரவும் தொடர்பு வேகத்தை உடைத்தெரிய வேண்டும். 

நம்மையும், நம் அண்டை அயலாரையும் தற்காத்து கொள்ள தடுப்பு நடவடிக்கையாக வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் 12 மணி நேரம் நம்மை  தனிமைப்படுத்தி 10 மணி நேரமே உயிர் வாழும் கொரானா வைரஸின் வீரியத்தை முறியடிக்க ஒன்றுபட்டு உதவுவோம்.

முடிந்தால் அன்றைய தினம் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை வெந்நீரில் உப்பு கலந்து உள்நாக்கில் படும்படி நன்றாக கொப்பளிப்போம். அசைவத்தை மறுத்து சைவமருந்து குழம்பு வைத்து சாப்பிடுவோம். துளசி,இஞ்சி,மிளகு,சீரகம் மஞ்சள் கலந்த ஏதாவது ஒரு சூடான பானங்களை உட்கொள்ள வேண்டுகிறேன். வந்த பின் தவிப்பதை தவிர்க்க வரும் முன் காப்போம்.🙏




Monday, March 9, 2020








பாரதீய அஞ்சல் சங்கம் BPEA சார்பாக மகளிர் தின நல்வாழ்த்துகள தெரிவித்து கொள்கிறேன்!🌈🎊🎄💐💐

Thursday, March 5, 2020

Compassionate ground-ல் 2005 ஆண்டு முதல்   2017 வரையிலான காலகட்டத்தில் நிராகரிக்க ப்பட்ட விண்ணப்பங்களை ஒரு முறை ரிலாக்ஸ் செய்து  மீண்டும் உண்மையான முறையில் பரீசீலித்து GDS குடும்பத்தாற்கு வேலை வழங்க அனைத்து CPMG அவர்களுக்கும் டைரக்ரேட் உத்தரவிட்டுள்ளது.



Wednesday, February 5, 2020


அன்பார்ந்த தேர்வு எழுதும் சகோதர சகோதரிகளே!  உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில்  http://cept.gov.in/exam.html மூலம் சாப்ட்வேரை டவுண்லோடு செய்து  பயிற்சி செய்து வாருங்கள்.
கம்ப்யூட்டர்  திரையில் முதலில் உங்களது Roll number, Name, community போன்றவற்றை சரியாக ஹால்டிக்கெட்டில் இருந்தது போல் அடித்துவிட்டு check box கட்டத்தில் டிக் செய்து  "start test" பட்டனை மவுஸ் மூலம் கிளிக் செய்து  பயிற்சி தேர்வை தொடங்குங்கள்.

திரையானது் இரண்டு பகுதிகளாக  பிரித்து காணப்படும். திரையின் மேலே முதல் பாதியில் நீங்கள் அடிக்க வேண்டிய ஒரு வரி்  மட்டுமே தெரியும். அதை பார்த்து மீதி பாதியில் கீழே தெரியும் திரையின் கட்டத்தில் டைப் அடிக்க வேண்டும்.

ஒரு வரி முடிந்ததும் முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே "Next sentence" ஆப்சன்  திரையில் தெரியும். அப்போது தான் அதை கிளிக் செய்து அடுத்த வரியை அடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

*இல்லையென்றால் அதை அடுத்த வரியுடன் சேர்த்து ஒரு  தவறான வார்த்தையாக கம்ப்யூட்டர் எடுத்து கொள்ளும். எனவே அந்த வார்த்தைக்கு அரை மதிப்பெண் குறைக்கப்படும்*

ஒவ்வொரு வார்த்தையின் முதல் 5 வார்த்தைகளை சரியாக அடித்து இருந்தாலே அதை கம்ப்யூட்டர் சரியான வார்த்தையாக எடுத்து கொள்ளும் . எனவே ஒவ்வொரு வார்த்தையின் முதல் 5 எழுத்துக்களை சரியாக அடித்து விடுங்கள்.

ஒரு வரி அடித்த பின் "Next sentence" ஆப்சனை கிளிக் செய்து அடுத்த வரியை பார்த்து அடிக்க வேண்டும். இது போலவே கடைசிவரை  ஒவ்வொரு வரி அடித்து முடித்த பின்பும் மீண்டும் "Next sentence" ஆப்சனை கிளிக் செய்து அடுத்த வரியை அடிக்க வேண்டும்.

அடிக்கும் போது ஏற்படும் தவறுகளை  மவுஸ், ஏரோ கீ, டெலிட் கீ பயன்படுத்தி தவறுகளை சரி செய்யலாம்.  அல்லது இறுதியாக அடித்து முடித்தபின் "review paragraph "ஆப்சனை மவுஸ் மூலம் கிளிக் செய்து  மேலே தெரியும் வாக்கியங்களை பார்த்து தவறுகளை சரி செய்து கொள்ளலாம். இவை அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட 15 நிமிட கால அவகாசத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும்.

ஆனால் Backspace பயன்படுத்தவே வேண்டாம். தவறுதலாக அதை தொடர்ந்து அழுத்திவிட்டால் அதுவரை அடித்த அனைத்து வார்த்தைகளும் அழிந்து விடும். எனவே கவனமாக இருக்கவும்.  கூடுதலாக இல்லாத வார்த்தைகளை அடித்து இருந்தாலோ அல்லது தவறாக அடித்து இருந்தாலோ மதிப்பெண்கள் குறைக்கப்படாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், சரியாக அடித்த வார்த்தைகளை மட்டுமே கணக்கில் எடுத்து மதிப்பெண்கள் வழங்குவோம் என்பது ஒவ்வொரு தவறான வார்த்தைக்கும் (0..5) அரை மதிப்பெண்கள் குறைப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சரியாகவே அடியுங்கள்.

இறுதியாக 15 நிமிடங்கள் முடிந்து திரையில் Timer  Zero(0) என்று வரும் வரை பொறுத்து இருங்கள்.நீங்கள் அடித்தது ஆட்டோமெட்டிக்காக Auto submit to SAVEஆகி விடும்.இறுதியாக பிரிண்ட் கொடுத்தபின் உங்களது மதிப்பெண்கள் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.அந்த பிரிண்டிங் தாளில் கையொப்பம் இட வேண்டும். இதை மறவாதீர்கள். 

தேர்வில் 600 கீ அழுத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப வாக்கியம் அமைக்கப்பட்டிற்கும். பொறுமையாக அடித்தாலே முழுவதுமே அடித்து விடலாம்.ஈசியாகவே இருக்கும். அப்படியே கஷ்டமாக வந்தாலும் பாதி அடித்தாலே பாஸ் தான். வழக்கம்போலவே அனைவரும் இந்த தேர்விலும் வெற்றி பெற்று வர வேண்டுகிறேன்.

Wednesday, January 29, 2020

Gds ஊழியர்கள் MTS,Postman பார்ப்பது போல் PAஇடங்களில் தற்காலிகமாக பணிபுரியலாமா? என்பது குறித்து உங்களது கருத்துக்களை 15 தினங்களில் தெரிவியுங்கள் என்று அனைத்து CPMGஅவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை டைரக்ரேட் இன்று வெளியிட்டுள்ளது.


Sunday, January 26, 2020

அஞ்சல் சொந்தங்களுக்கு  குடியரசு தின வாழ்த்துக்கள்...


Friday, January 24, 2020

SUPREME COURT OF INDIA - CA 1567 OF 2017 REGARDING PWD CAN BE GIVEN RESERVATION IN PROMOTION       CLICK HERE  for copy of Judgement (16 pages)
***

Thursday, January 23, 2020

GDS : Limited Transfer Facility for all categories -- detailed procedure with some relaxations compared to the previous orders 

...........

Gds transfer புதிய நடைமுறை 22-1-20 முதல் அமுலுக்கு வருகிறது. இது தொடர்பான பழைய ஆர்டர்கள் செயல்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறது.

1. ஆண் GDS ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டு சர்வீஸ் முடித்ததும் ஒருமுறை மட்டுமே டிரான்ஸ்பர் வழங்கப்படும். அதேபோல பெண் GDS ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு சர்வீஸ் முடித்ததும் இரண்டுமுறை மட்டுமே  அவரது  ஒட்டு மொத்த சர்வீஸ் காலத்திற்கும் சேர்த்து  டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

2. இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் Mutual transfer  வழங்கப்படும்.

3.  ஆண்/பெண் ஊழியர்கள் அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் டிரான்ஸ்பர் கேட்கலாம். பெண்ஊழியர்கள் அவர்களது கணவர் பணிபுரியும் இடத்திற்கோ அல்லது அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கோ டிரான்ஸ்பர் கேட்கலாம். மருத்துவ காரணத்திற்காகவும்   டிரான்ஸ்பர் கேட்கலாம்.

4. PWD GDS ஊழியர்கள் மற்றும் அவர்களை நம்பி இருக்கும் PWD உறவினர்கள் காரணமாகவும்1 ஆண்டு சர்வீஸ் முடித்ததும் டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

5.  Caste,police verificationமுடித்து நிரந்தர ஊழியராக ஆர்டர் பெற்றிருந்தால் மட்டுமே டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

6.  Put off duty, court case, police case உள்ள GDS ஊழியர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கப்படாது.court case என்பது உங்கள் மீது இலாகாபூர்வ விசாரணை அடிப்படையில் கேஸ் நடப்பது தானே ஒழிய நீங்கள் இலாகாவிடம் எனக்கு டிரான்ஸ்பர் கொடுங்க, வேலை கொடுங்க என்று போட்ட கோர்ட் கேஸ்கள் அல்ல.

7. GDS ABPM/Dak sevak பணியில் உள்ளவர்கள் 12,000/-சம்பள அடிப்படையில் இருந்தால் 12,000/-சம்பளம் தரப்படும்  BPM இடத்திற்கு மட்டுமே டிரான்ஸ்பர் வழங்கப்படும். மற்ற 14,500  சம்பளம் தரப்படும் BPM இடத்திற்கு டிரான்ஸ்பர் வழங்கப்படாது

8.  மற்றபடி ஏற்கனவே உள்ளது போல் 10,000/- சம்பள விகித இடத்திலிருந்து 10,000/- சம்பள விகித இடத்திற்கு டிரான்ஸ்பர் வழங்கப்படும். அதே போல 14,500சம்பள விகித இடத்திலிருந்து 14,500/- சம்பள விகித இடத்திற்கு டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

9.  ரீஜினுக்குள் டிரான்ஸ்பர் PMGதான் தரமுடியும். சர்க்கிள் அளவில் CPMG-TN தான் டிரான்ஸ்பர் தர முடியும். 

10. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை மாதம்  அவர்களது சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில் டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

11. Dak sevak ஆக உள்ளவர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு நிகராக உள்ள இடத்திற்கு Postal  to RMS  transfer தரப்படும். RMS -ல்  Dak sevak ஆக உள்ளவர்களுக்கு  postal  transfer-ல் BPM post தரப்பட மாட்டாது 








Wednesday, January 15, 2020


அன்பார்ந்த  அஞ்சல் சகோதர, சகோதரிகளுக்கு  பாரதீய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.