Sunday, September 2, 2018

IPPB-  Trade union view

ஒன்றுபட்ட போராட்டம் இதற்கு விரைவில் தீர்வு சொல்லும். ஒன்று நம்மை IPPB ஊழியராக்கனும், இல்லையென்றால்  IPPB ஐ நம்மிடமே கொடுக்கணும்.இடைப்பட்ட காலத்தில் நம்முடைய எதிர்ப்பை பலமாக வெளிப்படுத்தனும்.

புதியதாக கொண்டுவரும் IPPB (இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்) வங்கி கணக்கிலிருந்து RD, SSA, PLI, RPLI முதலியவை செலுத்த முடியும். IPPB அப்ளிகேஷன் வழியும் பொதுமக்களுக்கு நேரடியாக செலுத்த முடியும். இதன் மூலம் கிராமப்புற அஞ்சலகங்களின் *Transactions* மற்றும் *Revenue* கண்டிப்பாக குறையும். சில கிராமப்புற ஊழியர்களும் , சில இலாகா ஊழியர்களும் (குறிப்பாக இலாகா சங்கத்தை சேர்ந்தவர்கள்) கணக்கு துவங்கி கொடுத்தால் *கமிஷன்* கிடைக்கும் என்ற காரணத்தினால் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

கமிஷன் மட்டுமே கிடைக்கும், கிளை அஞ்சலகங்களுக்கு எந்த வித பயனும் இல்லை. IPPB யின் வருவாய் *அஞ்சல் துறைக்கு* கிடையாது. அதுபோல RPLI, PLI கணக்குகள் இன்னும் 2 ஆண்டுகளில் புதியதாக துவங்கவிருக்கும் LIC போன்ற *Limited Insurance* *Company* யில் சேர்க்கப்படும். கமிஷன் மட்டும் தருவார்கள், இலாபம் *Insurance* கம்பெனிக்கு தான் செல்லும். ஒன்றை மட்டும் எண்ணி கொள்ளுங்கள், இன்று கமிஷன்னுக்காக ஓடி ஓடி வேலை செய்யும் நீங்கள் நாளை கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலையை காப்பாற்ற ஓட வேண்டியிருக்கும். *அதிகாரிகள்* ஒருபோதும் ஓட மாட்டார்கள்.  இது தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டும் செயல் ஆகும்..
நன்றி : தோழர். வினோத் குமார்.


No comments:

Post a Comment