Friday, November 24, 2017

NFPE  P3, P4, GDS   மாநில  தலைமை  கவனிக்குமா ?


அஞ்சல் அலுவலகத்தில் இருந்து SPEED POST, REGISTER POST, PARCEL உள்ளிட்ட  தபால்களை  கொண்டு சென்று முகவரியாளர்களிடம்  பட்டுவாடா   செய்யவும் , வாடிக்கையாளர்களிடம்   இவைகளை  பெற்று புக்  செய்யவும் ஏஜென்ட்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று சென்னையில் உள்ள தலைமை தபால் அஞ்சல் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருந்தனர்.( நவ.18:-தினகரன்  நாளிதழ்.)
  
ஆனால், இது  தமிழ்நாடு  முழுக்க  கேட்டுள்ளதாக  ஒரு பொய்யான  செய்தியினை  சிலர்  தெரிவித்துள்ளனர்.  இது போன்ற  அறிவிப்பினை 23-11-17 வரையிலும் 3 கோட்டங்களில்  மட்டுமே  வெளியிட்டுள்ளனர் .  இது  முழுக்க முழுக்க  POSTMAN,  EDDA   வேலைப்பளுவினை  பாதிக்ககூடிய  ஒரு  முக்கியமான  பிரச்னை.  பத்தோடு  பதினொன்று  அல்ல .

SPEED POST,  REGISTER POST,  PARCEL உள்ளிட்ட  தபால்களை டெலிவரியிலிருந்து  எடுத்துவிட்டால் WORKLOAD  பாதிக்கப்படாதா? 
இதை காரணம்  காட்டி  BEAT  COMBINE OR  ABOLISHED செய்யமாட்டார்களா ? 
இவையில்லாமல்  புள்ளிகணக்கீடு  எடுத்தால்  EDDA சம்பளம்  உயர்ந்து விடுமா ?
 GDS BPM-ஐ COMBINE DUTY பார்க்க  சொல்லமாட்டார்களா ?
POSTMAN, EDDA-க்கு  பணி பாதுகாப்பு  இருக்குமா ?
 IPPB  வந்தால்  இப்போது  பணியாற்றும்  அனைவருமே ( LSG PA, HSG-II, HSG-I உட்பட ) கமிஷனுக்கு  வேலை   செய்யும் ஏஜெண்டுகளாக  பணி மாற்றம்  செய்யப்பட போகிறார்களா ?
 வருகிற  29-11-17, 30-11-17 இரு  தினங்களில்  கோட்டங்களில்  உடனடி  தொடர் உண்ணாவிரதமா ?
அல்லது  எல்லாம்  முடிந்தபின் இரங்கல் கூட்டமா ? 

 ஊழியர்களின்  நலன்  சார்ந்த  இது  போன்ற  விசயங்களில்  கவனம் கொள்ளுமாறு  அனைவரும்  கேட்கின்றனர்.


No comments:

Post a Comment