Wednesday, January 29, 2014

strike notice served in tn circle

STRIKE NOTICE SERVED BY JCA IN TAMILNADU CIRCLE ON 28.01.2014

தமிழக JCA சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப் பட்டது 

சென்னை CPMG அலுவலக வாயிலில் 28.01.2014  அன்று தமிழக NFPE மற்றும்  FNPO சம்மேளனங்களின் கூட்டுப் போராட்டக் குழு (JCA) சார்பாக  ஊதியக் குழு  தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாபெரும்  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .  

இந்த ஆர்ப்பாட்டத்தில்   சென்னை பெருநகரத்தின்  கோட்ட/ கிளைகளில் இருந்து சுமார் 300 தோழிய/தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் . ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு  NFPE  இணைப்புக் குழு கன்வீனர்  தோழர். JR மற்றும் FNPO இணைப்புக் குழு கன்வீனர் தோழர் . G.P. முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர் .  

NFPE  மற்றும் FNPO சம்மேளனங்களின்  உறுப்பு சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை  விளக்கிப் பேசினர்.  NFPE GDS சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர்.  R. தனராஜ்  நன்றி கூறி ஆர்ப்பாட்டக் கூட்டத்தை முடித்து வைத்தார். 

 ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன்  மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு  தமிழக JCA சார்பில்  எதிர்வரும் பிப்ரவரி  12 மற்றும்  13, 2014 தேதிகளில்  48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கான  நோட்டீஸ்  அனைத்து மாநிலச் செயலர்களால் முறைப்படி வழங்கப்பட்டது.  வேலை நிறுத்த நோட்டீஸ் நகலையும்  ஆர்ப்பாட்டக் கூட்டத்தின்  புகைப்படங்களையும் கீழே காண்க :-





No comments:

Post a Comment