Wednesday, July 6, 2016

05.07.2016 அன்று திருச்சி மண்டலத்தில் தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்

SRMU தொழிற்சங்கம் வருகிற 11.07.2016 முதல் நடைபெற இருக்கின்ற காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்று 06.07.2016 புது டெல்லியில் நடைபெறும் NJCM கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி நடந்துகொள்வதாக அதன் பொதுச்செயலாளர் தோழர்  N .KANNAIYA தெரிவித்துள்ளார்,

ஆகவே வருகிற  11.07.2016 வேலை நிறுத்தம் முழுவெற்றியுடன் நடைபெறுவதில் எந்த தயக்கமும் இருக்காது . நமது GDS தோழர்கள் வேலைநிறுத்தத்திற்கு 100 சதம் கலந்துகொள்ள மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.

05.07.2016 அன்று திருச்சி மண்டலத்தில் தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்  FNPO  NFPE தோழர்களின் கூட்டு தலைமலையில்  நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் தோழர்கள் NFPE அஞ்சல் 4 செயலரும் COC  கன்வீனர் தோழர் G .கண்ணன் , GDS மாநில செயலர் R.தனராஜ் FNPO  RMS 3 செயலரும் COC கன்வீனர் தோழர் P. குமார் மற்றும் மாநில, மண்டல , கோட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு போராட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.

சுமார் 100 தோழர்களுக்குமேல் கலந்துகொண்டனர், அஞ்சல் 3 கோட்டச்செயலர் மற்றும் அஞ்சல் 4 கோட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு நல்லமுறையில் ஏற்பாடு செய்தனர் மாநில சங்கம் நன்றிகூறுகிறது 

No comments:

Post a Comment