Thursday, March 26, 2015

NFPE சார்பாக கும்பகோணத்தில் 26.03.2015 ஒரு நாள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது


இனிய  தோழர்களே ! தோழியர்களே,


தொழிற்சங்க ஜனநாயகத்தின் குரல்வலையை நெறித்திடும் மண்டல மாநில அஞ்சல் நிர்வாகங்களை கண்டித்தும்... 


அஞ்சல் ஊழியர்களை கசக்கிப் பிழியும் கண்மூடித்தனமான உத்தரவுகளை கைவிட கோரியும் ... 

மற்றும் அஞ்சல் ஊழியர் நலம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் .


26.3.2015 இன்று  NFPE அஞ்சல் 3, அஞ்சல் 4, GDS -NFPE உள்ளடக்கிய  NFPE சம்மேளனம்சார்பாக கும்பகோணத்தில்  26.03.2015 ஒரு நாள்  வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது 


ஆர்ப்பாட்டத்தை  NFPE  P3  கோட்டச்செயலர் தோழர் பெருமாள் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகச்சிறப்பாக நடத்தினார். P3 தலைவர் தோழர்  பிரபாகரன் அவர்கள், P3 தோழர் ஜோதி அவர்கள்,  P4 கோட்டச்செயலர் தோழர் அய்யப்பன்  அவர்கள், P4 பொருளாளர் தோழர் மாணிக்கம் அவர்கள், , GDS  NFPE கோட்டச்செயலர் தோழர் தம்பிராஜ் அவர்கள்  நாம் அனுபவித்து வரும் பிரச்சனைகளை சுருக்கமாக சிறப்பாக எடுத்துக்கூறினர். 

ஆர்ப்பாட்டக்காட்சிகள்



 












No comments:

Post a Comment