Thursday, December 11, 2014

GDS  SEMINAR  ON  14/12/2014... AT DHARMAPURI



அன்பார்ந்த  GDS தோழர்களே , தோழியர்களே  வணக்கம் !

                          கடந்த 30.11.2014 அன்று  நமது அஞ்சல்  துறையின்  postman பணிக்கான   தேர்விற்கு  seminar   நடை பெற்றது
  என்பது அனைவரும் அறிந்ததே .அதில்  பெரும்பாலான  GDS  தோழர்கள்  கலந்து கொண்டு  பயனடைந்தனர் .அவர்களின் 
வேண்டுகோளுக்கு  இணங்க நமது சங்கத்தின் சார்பாக  அடுத்த  seminar-ஆனது 14.12.2014  அன்று நமது தர்மபுரி 
 தலைமை  அஞ்சலகத்தில் நடைபெற  உள்ளது

நமது  துறையின்  ஓய்வு பெற்ற  முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், திரு.R.K.கண்ணன் அவர்களும், திரு.பாலாஜி ASP,தர்மபுரி , அவர்களும்  சிறப்பு வகுப்புகள்  எடுக்க  தங்கள் இசைவை தெரிவித்துள்ளனர் . 
முதற்கட்டமாக   வருகின்ற  14.12.2014 அன்று   திருபாலாஜி  ASP அவர்கள்  கணிதமும்,  மதிய இடைவேளைக்கு  பிறகு  நமது  தோழர்கள்  ஆங்கிலம், தமிழ் மற்றும்  பொது அறிவு  வகுப்புகளும்  எடுக்க உள்ளனர்.

14.12.2014 நடைபெறும்  seminar-ஆனது காலை 9.30 மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறும்.   எனவே அனைத்து GDS  தோழர்களும்  GDS to PA, GDS TO P.man, GDS TO MTS   ஆகியவற்றிற்கு  தங்களை  தயார்படுத்தி கொண்டு  இருப்பவர்களும்    இச்சிறப்பு  வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு  கேட்டுகொள்கிறோம்
                                       “ தெய்வத்தான்  ஆகாது  எனினும்  முயற்சிதன்
                                            மெய்வருத்தக்  கூலி  தரும் !”


A.முஹமது  இஸ்மாயில்            C.சந்திரன்                                     V. பழனிமுத்து
P4-செயலாளர்                               GDS-செயலாளர்                              P3-செயலாளர்

வெற்றி பெற வாழ்த்தும்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE), கும்பகோணம் கோட்டம்

No comments:

Post a Comment