Saturday, December 27, 2014

ஆன்லைன் வர்த்தகத்தில் இணைகிறது அஞ்சல்துறை

புதுடெல்லி: பாரம்பரியம் மிக்க வாரணாசி புடவைகள் பிரபலமானவை. இங்கு நெய்யப்படும் ஆடைகள் ஆன்லைன் மூலம் நாடுமுழுவதும் விற்பனை செய்யும் வகையில் இந்திய அஞ்சல் துறையுடன் ஸ்நாப்டீல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் வாங்கப்படும் ஆடைகளை நெசவாளர்களிடம் பெற்று ஆர்டர் செய்பவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அஞ்சல்துறை மேற்கொள்ளும்.

 இதுபோல் கைவினை கலைஞர்களின் பொருட்களும் விற்கப்படும். இதற்காக இந்தியா போஸ்ட் ஸ்டோரை ஸ்நாப்டீல் ஏற்படுத்தும். பரீட்சார்த்த முயற்சியாக வாரணாசியில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. பின்னர் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளிலும் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,54,866 அஞ்சலகங்கள் உள்ளன.  

No comments:

Post a Comment