Saturday, March 29, 2014

DEPARTMENT'S REPLY TO OUR GENL. SECRETARY ON AGE RELAXATION FOR WIDOWS, DIVORCED WOMEN IN EXAMS

DEPARTMENT'S REPLY TO OUR GENL. SECRETARY ON AGE RELAXATION FOR WIDOWS, DIVORCED WOMEN IN EXAMS

DOPT உத்திரவுப்படி கணவனை இழந்த , விவாகரத்து செய்யப் பட்ட , சட்ட பூர்வமாக கணவனைப் பிரிந்து வாழும் , மறுமணமாகாத பெண்களுக்கு,  மத்திய அரசு  வேலை வாய்ப்பில் , அவர்களுக்கு மறு வாழ்வு கொடுக்கும் நோக்கத்தில் , தேர்வுக்கு அனுமதிக்கப்படும் வயது வரம்பில்  தளர்வு என்பது அளிக்கப்பட வேண்டும்  (35  வயது O C  மற்றும் 40 வயது, SC /ST ) என்று உள்ளதை , நமது இலாக்காவில் எழுத்தர் தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப் படவில்லை  என்றும்  அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றும் நமது பொதுச் செயலாளர் , இலாக்கா முதல்வருக்கு கடிதம்  அளித்தது நமது வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருந்தது. தற்போது  நமது இலாக்காவில் இருந்து அதற்கு பதில் அனுப்பியுள்ளார்கள் . அதன் நகல் கீழே பிரசுரிக்கப் பட்டுள்ளது . பார்க்கவும்.  

அதாவது , DOPT  இன் சட்ட விதி என்பது STAFF  SELECTION COMMISSION மூலமாகவோ அல்லது  EMPLOYMENT EXCHANGE மூலமாகவோ தேர்வுக்கு செல்பவர்களுக்கு/ தேர்வு பெறுபவர்களுக்கு மட்டும் (?) தானாம் . இது வேறவாம் .  இது தனித் தேர்வாம் . இதுக்கெல்லாம் அந்த சட்ட விதி பொருந்தாதாம் . 

என்னமா யோசிக்கிறாங்க பாருங்க ! 

 நேரடித் தேர்வுக்கு பொருந்தும் என்று  நாம் போராடி உத்திரவு  வாங்கினால் , அதுக்கும் புதுசா  யோசிப்பாய்ங்க போல . இதுல  தபால் இலாக்கான்னு போடல ..அதுனால இதுக்கு பொருந்தாதுன்னு கூட சொல்லுவாய்ங்க. அதிகாரிகள் எங்கேயும்  ஒரே மாதிரியாத்தான் இருப்பாய்ங்க  போல இருக்கு .

  தொழிலாளிகதான்  பிரிஞ்சு பிரிஞ்சு யோசிக்கிறாங்க !  
என்னவோ போங்கப்பா  !


No comments:

Post a Comment