Tuesday, January 28, 2014

கள்ள நோட்டுகளை தடுக்கவே 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்: ரகுராம் ராஜன்

மும்பை,
2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு எண் இடம்பெறாத ரூபாய் நோட்டுகள் மார்ச் மாதத்திற்கு பின்னர் மாற்றப்படும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மும்பையில் பேசிய பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன்;  2005ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுகள் மாற்றம் நடவடிக்கை, கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், வரி ஏய்ப்பு தடுப்பதற்கும் இல்லை. ஆனால் கள்ளநோட்டுகள் புழக்கத்தை கட்டுபடுத்தும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment