Friday, December 15, 2017

RECRUITMENT RULES DRAFT


MTS,  POSTMAN,  PA  பதவியுயர்வினை   GDSக்கு  கிடைக்கவிடாமல்  செய்யும்  வழக்கமான  ரெக்யூர் மென்ட்  ரூல்ஸ்  இது . இது  GDS-ஐ பாதிக்க கூடியது  . தொழிற்சங்கங்கள்  கடந்த காலங்களில்  சும்மா இருந்தது போல்  இல்லாமல் , இதில்  உள்ள பாதகமான  அம்சங்களை உடனடியாக  சுட்டிக்காட்டி GDSக்கும்  பதவியுயர்வு  கிடைக்க  செய்ய வேண்டும் . 

உதாரணமாக .
1.நேரடியாக  வரும்  வெளியாருக்கு  வயது  வரம்பு , அப்ளிகேசன்  அனுப்பும்  கடைசி நாள் வரை கணக்கிடும்   போது , GDSக்கு மட்டும்  ஜனவரி 1 என்று  சொல்வது   அநீதி இல்லையா ?டிபார்ட்மென்ட்   ஊழியர்கள் பதவியுயர்வு  பெறுவதற்கு  தானே  இதை  கணக்கில்  கொள்கிறார்கள்.  இதை எப்படி  GDSக்கு மட்டும்  அப் ளை  செய்கிறார்கள் ? அப்படியென்றால் டிபார்ட்மென்ட்   ஊழியர்களின்  பதவியுயர்வாக  இதை கருத வேண்டியது தானே .

2. நேரடியாக  வரும்  வெளியார்கள்  வேகண்ட்  இல்லாத  டிவிசனை  சார்ந்தவர்களாக  இருந்தாலும் அவர்கள்   தேர்வு எழுத அனுமதித்து  வேறு டிவிசனிலில்   அவர்களை தேர்ந்து எடுக்கலாம். ஆனால் GDSக்கு மட்டும்  அந்த  டிவிசனில்  வேகண்ட் இல்லையென்றால்  தேர்வு எழுத முடியாது  என்பது  அநீதி . மேலும் ,வேறு டிவிசனில்  காலியிடம்  இருந்தாலும்  SURPLUS ஆக  உள்ளவர்களை வைத்து  நிரப்ப முடியாது என்பது  GDSக்கு மட்டும் இழைக்கப்படும்  அநீதி .

3.   நேரடியாக   தேர்வு எழுத வரும்  வெளியார்கள் , MTS,  POSTMAN,  PA  தேர்வுகளை உடனே     எழுதி விடுகின்றனர் . ஆனால் GDS மட்டும்  ஐந்து  ஆண்டுகள்   சர்வீஸ் முடித்தபின்   தான்,  POSTMAN,  PA எழுத வேண்டும்  என்பது  அநீதி இல்லையா ? GDS கமிட்டியே MTS,  POSTMAN தேர்வு  எழுத சர்வீஸ் தேவையில்லை  என்று கூறியுள்ள நிலையில் பழைய படியே  GDS பதவியுயர்வினை தடுக்கும் வகையில்  ஐந்து  ஆண்டுகள்   சர்வீஸ் முடிக்க  கூறுவது  அநீதி இல்லையா ?

4.  ஒவ்வொரு  வருசமும்   இந்த  இலாக்காவுக்காக   வருமானத்தை  அதிகரிக்க  வேண்டி ,கையில் உள்ள  பணத்தை போட்டு கூட   SB, RD, TD, RPLI,  E-POST ,GOLD BOND,  FIRE CRAKERS,  எல்லாம்  பிடித்து  கொடுத்து  உழைத்து வரும் GDS ஊழியர்களுக்கு  பதவியுயர்வில்  சலுகைகள்  வழங்காமல்  மறுப்பது  நியாயமா ? POSTMAN   தேர்வு எழுத +2  படித்து இருக்க வேண்டும் , PA தேர்வு எழுத DEGREE  படித்து இருக்க வேண்டும் என்பது  தற்போது  பணியாற்றும்  பல GDS ஊழியர்களுக்கு  பாதகமானது  இல்லையா ? தேர்வில் ,அவர்களுக்கு  தனியாக  50   சதவீத இடங்களை  ஒதுக்க வேண்டாமா ?
GDS ஊழியர்கள்  தனித்துவ மான வர்கள்  என்று  சுப்ரீம் கோர்ட்டே  கூறியுள்ள  நிலையில்  அவர்களை நேரடியாக   தேர்வு எழுத வரும்  வெளியார்க ளாக  கருதுவது  GDS பதவியுயர்வினை தடுக்காதா  ?


அதேநேரத்தில்  , புதிதாக  ஒரு சில தேர்வு முறைகள்  கூறியிருப்பது  வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.


No comments:

Post a Comment