Friday, October 17, 2014

CHIEF PMG, TN அவர்களுக்கு NFPE GDS சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !

CHIEF  PMG, TN  அவர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் 
தமிழ் மாநில NFPE  GDS  சங்கத்தின் 
நெஞ்சார்ந்த நன்றி !

          அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். கடந்த 24.09.2014 அன்று தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும் தமிழ் மாநில NFPE  GDS  சங்கத்தின் சார்பிலும் , நம்முடைய அஞ்சல் மூன்றின்  பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுடன்  நாம் சென்று சில பிரச்சனைகளை அளித்து விவாதித்த விபரம் ஏற்கனவே நம் அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் கடந்த அக்டோபர் 1 ந் தேதி அன்று வெளியிட்டிருந்தோம். அதில் நாம் அளித்திருந்த ஏழு கடிதங்களில் , இரண்டு பிரச்சினைகளுக்கு  நமது CHIEF  PMG அவர்கள் தற்போது தீர்வளித்துள்ளார்.

1.   தபால் காரர்  தேர்வில் வெற்றிபெற்றிருந்தும்  நீதி மன்ற வழக்கின் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக  நிலுவையில் இருந்த  10 க்கும் மேற்பட்ட GDS  ஊழியர்களுக்கு பணி  நியமன உத்தரவு.

          2012 க்கான தபால்காரர் தேர்வு 2013 ஏப்ரல் திங்களில் நடைபெற்றது.  தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு  ஆங்காங்கே  பல GDS ஊழியர்கள் பணி  நியமனம் பெற்றனர். ஆனால் ANSWER  KEY தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டு நம்முடைய மாநிலச் சங்கத்தால் REVALUATION செய்திட பிரச்சினை கடந்த 23.09.14 இல்  எழுப்பப் பட்டது.(பார்க்க மாநிலச் சங்க வலைத்தளச் செய்தி - செப். 2013 ) 

                இதன் காரணமாக  மாநிலமெங்கும் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு  விடைத்தாள் மறு மதிப்பீடு செய்து REVISED  RESULT அளிக்கப்பட்டது. ஏற்கனவே பணி  நியமனம் பெற்ற தோழர்கள்  தங்களின் பணி  நியமனத்தை ரத்து செய்திடக் கூடாது என்று கோரி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையும் பெற்றனர் . இதனால் உரிய காலிப் பணியிடம் இல்லை என்றும் தடை ஆணை உள்ளதென்றும்  முறையாகத் தேர்வு பெற்ற இந்த GDS  ஊழியர்களுக்கு  தபால்காரர் பதவி அளிப்பது நிறுத்தப் பட்டிருந்தது. 

                 இந்தப் பிரச்சினை, பாதிக்கப்பட்ட தோழர். முத்துராமன் என்பவரை ஆதாராமாகக் கொண்டு ,  பலகாலமாக நம்மால் எழுப்பப் பட்டாலும் , நீதி மன்ற வழக்குகள் முடிவடையாத காரணத்தால் சிக்கல் தீரவில்லை. எனவே 2014 க்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கும் தேர்வு நடைபெற உள்ள சூழலில் , 2013 இல் முறையாக தேர்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப் படாததை சுட்டிக் காட்டி நாம் CHIEF  PMG அவர்களிடம் பேசினோம். பிரச்சினையின் நியாயத்தை உணர்ந்த  CHIEF  PMG அவர்கள், உரிய சட்ட ஆலோசனை செய்த பிறகு முடிவெடுப்பதாக அறிவித்தார். 

          இந்தப் பிரச்சினை குறித்து நாம் பல்வேறு ஆவணங்களை நமது APMG, RECTT  திரு. N . ரவி அவர்களிடமும் அளித்துப் பேசினோம். இவற்றை  CHIEF  PMG அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் உறுதி அளித்தார் . அதன் பேரில்  பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு  தற்போது பாதிக்கப்பட்டஅனைத்து ஊழியர்களுக்கும் உடனடி பணி  நியமனம் வழங்கிட நமது CHIEF  PMG அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது. உத்திரவின் நகலை கீழே பார்க்கவும். இந்தப் பிரச்சினையின்  தன்மையை புரிந்து கொண்டு பரிவுடன் முடிவினை எடுத்த நமது CHIEF  PMG  உயர்திரு. T. மூர்த்தி அவர்களுக்கும் , பிரச்சினை தீர்ந்திட உறுதுணையாக இருந்த  APMG, RECTT  திரு. N .ரவி   அவர்களுக்கும்   நமது அஞ்சல் மூன்று மற்றும் NFPE  GDS  சங்கங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



          இந்த சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு பிரச்சினைகளை  மாநில தலைமை அதிகாரிடம் பேசித் தீர்வு காண வழி வகுத்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நன்றியினை பதிவு செய்கிறோம்.


No comments:

Post a Comment