Wednesday, October 1, 2014

CIRCLE UNION LETTER TO CPMG, TN ON GDS BPM INITIAL FIXATION OF TRCA

CIRCLE UNION LETTER TO CPMG, TN ON GDS BPM INITIAL FIXATION OF TRCA

பொதுச் செயலருடன் CPMG  இடம் நேர்காணல் 

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! கீழே காணும் ஏழு கடிதங்களும்  நம்முடைய  CPMG  அவர்களிடம் கடந்த 24.09.2014  JCA  தார்ணா  நடைபெற்ற தினத்தன்றே  அளிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டுள்ளன.              

JCA  தார்ணாவுக்கு வருகை புரிந்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலாளர் தோழர். N . சுப்ரமணியன் அவர்களுடன் நம்முடைய மாநிலச் செயலர் தோழர். J .R ., GDS  மாநிலச் செயலர் தோழர். R . தன்ராஜ், அஞ்சல் மூன்று மாநில தலைவர் தோழர். J .ஸ்ரீ வெங்கடேஷ், மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி, ராமநாதபுரம் அஞ்சல் மூன்றின் செயலர் தோழர். ஜனார்தனம் ஆகியோர் இந்த INFORMAL  MEETING  இல் கலந்து கொண்டோம். விவாதிக்கப் பட்ட விபரங்கள் :-                                                             

1. HSG  I  REVISED  RECRUITMENT  RULES  அடிப்படையில் அனைத்து HSG  I       
    அலுவலகங்களும்  GENERAL LINE  OFFICIALS  கொண்டு பதவி உயர்வு       
    அளிக்க வேண்டும் என்ற பிரச்சினையில் DTE  க்கு கடிதம் எழுதியுள்ள     
    தாகவும்  விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்       
    CPMG  தெரிவித்தார்.                                                                                                                 

2. தென் மண்டலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கப்
    படும்       பிரச்சினையில்  ஏற்கனவே அளித்த உறுதி மொழியின் பேரில் 
    தானே நேரில்  பேசி தீர்த்து வைப்பதாக   CPMG  உறுதி அளித்தார்.               

3. ராமநாதபுரம்  கோட்டச் செயலர் மாற்றப்பட்ட பிரச்சினையில், உடன்      
    தலையிட்டு  தீர்த்து வைப்பதாக  CPMG  உறுதி அளித்தார். (தற்போது        
    இது குறித்து REVISED  REPRESENTATION  பெறப்பட்டு  DPS , SR  தலைமை  
    யிலான  TRANSFER  COMMITTEE யின் ஒப்புதலுடன்  PMG, SR  க்கு கோப்பு 
    அனுப்பப் பட்டுள்ளதாக  தென் மண்டல DPS  அவர்கள் நம் மாநிலச்            
    செயலரிடம் தெரிவித்தார்கள் .)                                                                                        

4.  இலாக்கா உத்திரவுக்கு எதிராக கண்மூடித்தனமாக GDS SV மற்றும் DSV 
     பதவிகள் REDEPLOY செய்யப்படுவது தவறு என்பதை சுட்டிக்காட்டி          
     னோம். மேலும் மதுரை, சேலம், ஈரோடு  பகுதிகளில் இலாக்கா உத்திர 
     வின் படி உரிய அளவைத் தாண்டியே STAMP விற்பனை இருந்த                  
     போதிலும் இப்படி REDEPLOY  செய்வது தவறு என்பதை சுட்டிக் காட்டி    
     னோம். இது குறித்து REPORT  பெறப்பட்டு அதனடிப்படையில் பரிசீலனை
     செய்யப்படும் என்று  CPMG  உறுதி அளித்தார்.                                                       

5. GDS  BPM INITIAL  FIXATION OF  TRCA  விஷயத்தில் ,  நியாயமான                    
    பிரச்சினை  இது என்றும்  ,  பிரச்சினையை தீர்த்திட உடன் ஆவன                 
     நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.                                         

6. இதர இரண்டு பிரச்சினைகளின் மீதும்  தற்போது மேல் நடவடிக்கை           
    எடுக்கப்பட்டு  வருகிறது .விரைவில் உரிய உத்திரவை  எதிர்                           
     பார்க்கலாம் .                                                                                                                                

அத்துணை பிரச்சினைகளையும் பொறுமையாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்த  நம்முடைய CPMG  அவர்களுக்கு நம்  மாநிலச் சங்கத்தின் நன்றியைப் பதிவு செய்கிறோம் !    

தொடர்ச்சியாக நிறைய செய்திகள்(128) ,  மற்றும் புகைப்படங்கள்  கடந்த   மாதத்தில்  அளித்ததால் , இவை அனைத்தையும்   கடந்த வாரத்தில்              வெளியிட முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.                 


No comments:

Post a Comment