Wednesday, June 1, 2016

GDS ஊழியர்களே சிந்தித்து பாருங்கள்....Part-1


GDS ஊழியர்களே  யார் உங்களுக்காக உழைக்கிறார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

NFPE GDS சங்கம் NFPE சம்மேளனத்தை தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் GDS ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக1977ஆம்ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு, நமது தலைவர் தோழர் K.V.S அவர்கள், தோழர்.கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதல் படி  தாக்கல் செய்யப்பட்டது.  சுப்ரீம் கோர்ட் 13-12-2013 அன்று டில்லி ஐகோர்ட்டு-ஐ இந்த ரிட் மனுவை விசாரிக்க கூறியது. டிபார்ட்மெண்ட் , டில்லி ஐகோர்ட்டில் 5  முறை வாய்தா வாங்கி, டில்லி  CAT-TRIBUNAL- க்கு மாற்றிட கோரியது. அங்கேயும் 9-7-15,  10-9-15,  18-11-15,  23-1-16 ஆகிய நாட்களில் வாய்தா வாங்கியதால் CAT-TRIBUNAL ஆனது   25-7-16 அன்று இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதே, இதற்காக பாடுபட்டது யார்?

தோழர்களே, GDS TO P.A  தேர்வுகளில் 1000 மார்க், 60% மார்க் என்று இருந்த முட்டுகட்டைகளை  NFPE GDS, NFPE தமிழ் மாநில செயலாளர்கள் தோழர் தன்ராஜ் அவர்கள், தோழர்.ஜெ.ராமமூர்த்தி அவர்கள் அன்றைய செகரட்டரி ஜெனரல் தோழர்.கிருஷ்ணன் அவர்கள்மூலம் இலாகாவில்பேசி GDS ஊழியர்கள் உட்படஅனைத்து அடிமட்டசமுதாயமும் கலந்து கொள்ளும்படி P.A  தேர்வில் ஒருபுரட்சியே செய்து மார்க் என்பது தேவையில்லை, பாஸ் செய்திருந்தாலே போதும் என்ற ஆர்டரை NFPE பெற்று தந்ததை மறுக்க முடியுமா?
 (JCM Minutes No.22 Sl.no. 04 Dt.27-11-2013 &  Ref.GSR No.62E,F.No.37-47/2010 SPB -1 Dt.27-01-2014 )
இன்றைக்கு இவ்வளவு GDS ஊழியர்கள் EXAM எழுதுகிறார்களே, இதற்கு முன்பு இது போல் உண்டா?

POSTMAN, MTS  தேர்வுகளில் வெளிப்படையான தேர்வு முறைக்கு  OMR முறை கேட்டிருந்தோம். (Ref .JCM Minutes No.16 Sl.no. 92 ) வினாத்தாள் கடினமாக இருக்ககூடாது, தமிழிலும் தரப்படவேண்டும் என்று கேட்டிருந்தோம் (Ref .JCM Minutes No.52 Sl.no. 10 ) இதனை இலாகாவிடம் பேசி, வினாத்தாள் சுலபமாக விடை அளிக்கும் முறையிலும்,தமிழிலும், OMR முறையிலும் நடத்த வேண்டும் என்ற ஆர்டரை NFPE பெற்று தந்ததை மறுக்க முடியுமா?          
 ( Ref.OM No.45-14/2012 SPB -1 Dt.17-01-2014 )

எல்லாவற்றிலும் மேலாக  பல டிவிசன்களில் 1-1-2006க்கு பிறகு  GDS BPMஆக அப்பாய்மெண்ட் ஆன பலருக்கு  அதற்கு இணையான புதிய TRCA fixation  செய்யப்படாமல் Lowest TRCA slab 2745 தான் பெற்றுவந்தனர். இதுகுறித்து NFPE  சம்மேளனம் அப்போதைய மினிஸ்டர் திரு.சச்சின்பைலட் அவர்களிடம் தொடர்ந்து முறையிட்டதால் திரு .V.P.சிங் அவர்கள் தலைமையில் 2-2-2012 அன்று ஆபீசர்கள் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ஆய்வு நடத்தி    1-1-2006க்கு பிறகு  GDS ஆக அப்பாய்மெண்ட் ஆன தினத்தில் அந்த போஸ்ட் எந்த TRCA slab கீழே வருகிறதோ ,அதற்குரிய சம்பளம் பிக்ஸ் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. (Ref. Report of v.p singh committee,Dte no.5-1/07-WS-1 Dated on 27-4-2012) இதை தொடர்ந்து தான் 16-7-2012 அன்று clarification on fixation of newly appointed GDS குறித்து டைரக்ரேட் ஆர்டர் (Ref.Dte,Lr.no5-1/07-WS-1on16-07- 12)வெளியிடப்பட்டு,இந்த பரிந்துரையை உறுதிசெய்தது.


இது குறித்து பல்வேறு கோட்ட, மாநில, மத்திய சங்க கூட்டங்களில் வலியுறுத்தி வந்தோம். இதை அறிந்த நமது தலைவர் தோழர் K.V.S அவர்கள், தோழர் J.R அவர்களிடம் இது குறித்து PMG- CCR அவர்களிடம் பேச கூறியிருந்தார்.  தோழர் தன்ராஜ் அவர்கள், தோழர் J.R அவர்கள் நேரில் சென்று மிகுந்த முயற்சி எடுத்து, விளக்கிகூறி பேசியதன் விளைவாகவே 12 டிவிசன்களில்  குறிப்பாக சென்னை, பாண்டிச்சேரி, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூரில் உள்ள அனைத்து GDS ஊழியர்களுக்கும் 3660 TRCA (BPM)  , 4220 TRCA ( EDDA) வரை புதிய சம்பளமாக பிக்ஸ் செய்யப்பட்டது.  இது யாரால் வந்தது ? நமக்காக NFPE பெற்று தந்ததை மறுக்க முடியுமா? (Ref.no.A/GDS/Dlgs@Pondicherry Dvn.Dt.on-10-7-2013)

மேற்கண்ட அகிலஇந்திய பிரச்சனைகள் எதாவது ஒன்றாவது நாங்கள் டைரக்ரேட்டில் பேசிவாங்கினோம்என்று மகாதேவய்யாவால் ஆதாரத்துடன் கூறமுடியுமா? இதுபோன்ற பிரச்சனைகளுக்காக டைரக்ரேட்டில் நேரில் போய் பேசிஉள்ளாரா? ஆனால்,தோழர் பாண்டுரங்கராவ் அவர்கள் NFPE தலைவர்களுடன் சென்று பேசிவருகிறார்.

 GDS க்கு சாதகமான ஆர்டர்கள் வந்தால் தன்னால் வந்தது என்றுகூறுவதும்,வரவில்லை என்றால் கிளார்க் யூனியன் தடுத்து விட்டதாக தொடர்ந்து நாக்கூசாமல் பேசிவரும் மகாதேவய்யா NFPE சம்மேளனம் ஸ்டிரைக், போராட்டம் என்று அறிவித்தால், உடனே தானும்போட்டிக்கு தனியாக ஸ்டிரைக், போராட்டம்  அறிவித்து வருகிறார்என்பதை உணருங்கள் தோழர்களே..
(தொடரும்......)

No comments:

Post a Comment