Monday, March 4, 2013

கிழிந்தது மகாதேவையா முகமூடி ....


கிழிந்தது மகாதேவையா முகமூடி ....

இதற்குத்தான் ஆசைப் பட்டாயா மகாதேவையா ? 

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் NFPE  
பேரியக்கம் எந்த ஒரு அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப் 
பட்ட தொழிற்  சங்கத்துடன்  தோன்றிய நாள் முதலே 
 இன்று வரை இணைக்கப் படவில்லை என்று .

பல்வேறு அரசியல் கருத்தோட்டமுள்ள தலைவர்கள் ,  
1954 முதலே  பல்வேறு  கால கட்டங்களில்  NFPTE  
இயக்கத்தில் முன்னணித் தலைவர்களாக இருந்தபோதும்  
அவர்களெல்லாம்  தங்களின் தனிப்பட்ட அரசியல்  கருத்து 
என்பது வேறு - NFPTE  இயக்கம் என்பது வேறு  என்றே 
நினைத்தார்கள் . உதாரணமாக  தோழர்  மோசா , 
தோழர்  குப்தா , தோழர்  பிரேம் , தோழர் L .A .P ., 
தோழர் A .S . ராஜன்,  தோழர். K .G . போஸ் , தோழர். ஆதி , 
தோழர். N .C .A . ஆகியோரை  நாம் பார்க்கலாம் . 

தற்போது கூட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு 
மாநிலக் கட்சிகளின் கருத்தோட்டமுள்ள  தலைவர்கள் 
NFPE யில்   தலைமைப் பொறுப்பில் உள்ளது 
முன்னணித் தோழர்களுக்கு தெரியும் . பல்வேறுபட்ட  
கருத்தோட்டமுள்ள  லட்சக் கணக்கான உறுப்பினர்களை 
உள்ளடக்கிய பேரியக்கம் தான் முந்தைய NFPTE - 
தற்போதைய  NFPE  ஆகும் . இதன் வலிமையே 
வேற்றுமையில் - ஒற்றுமை  என்பதுதானே ! 

அதனால் தான் இன்றுவரை அசைக்க முடியாத 
இரும்புக் கோட்டையாக NFPE  இருந்து வருவதும் உண்மை.  
60 ஆண்டுகள் இந்திய தேசத்தை ஆண்ட  காங்கிரஸ்  கட்சி 
கூட தன்னுடைய  INTUC  இன் இணைப்பு சங்கமாக 
FNPO வை   உற்பத்தி செய்தும் , இன்று வரை கூட 
குறைந்த பட்சம் 15% உறுப்பினர்களை 
GDS சங்கத்தில் பெற முடிய வில்லை . 

மூன்று முறை மத்தியில் ஆட்சியை பல்வேறு கூட்டணி 
வாயிலாகப் பிடித்தும் கூட- இந்தியாவின் மிகப் பெரிய 
கட்சியான   பாரதீய ஜனதாக் கட்சியால் தன்னுடைய 
BMS  சங்கத்தின் அங்கமான BPEF  க்கு இன்றுவரை கூட 
குறைந்த பட்சம் 5%  உறுப்பினர்களைப் பெறமுடிய வில்லை .

ஆனால் , இதுவரை  எந்த ஒரு தலைவரும் அவரவர்களுக்கு 
பிடித்த அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப் பட்ட 
தொழிற் சங்கத்தில் NFPE  பேரியக்கத்தை  இணைக்க வேண்டும் 
என்று  எண்ணியதுமில்லை --  அதற்கு எவரும்  துணிந்ததும் இல்லை .

இன்றோ........  நேற்று வந்த  மகாதேவையா  துணிந்து விட்டார் . 

லட்சக் கணக்கான  GDS  ஊழியர்களின்  தியாகத்தால் உருவான,
இலாக்காவால் அங்கீகரிக்கப் பட்ட மிகப் பெரும்  AIPEDEU  
சங்கத்தை ...  நம்மால் உருவாக்கப் பட்ட GDS  சங்கத்தை ,  
நம்மில் யாரிடமும் கேட்காமலேயே  இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின்  
அங்கீகரிக்கப் பட்ட  தொழிற் சங்கமான  AITUC  யில்
இணைத்துவிட்டார்  என்பது  மிகப் பெரும் அதிர்ச்சியூட்டும் 
செய்தியாகும் . செயற்குழுவைக் கூட்டாமலேயே ,
பொதுக் குழுவைக் கூட்டாமலேயே  
தன்னிச்சையாக  முடிவெடுத்து இணைத்து விட்டார். 

AITUC  இன் 40 ஆவது  பொதுக் குழு கூட்டம்  கடந்த 
ஜனவரி மாதம்  6 மற்றும் 7 தேதிகளில் கல்கத்தா
நகரில் நடைபெற்றது. அதன் நிகழ்வுகளையும்  
AITUC  இல் இணைக்கப்பட்ட சங்கங்களின்  
பொதுச் செயலர்களையும்   பொதுக் குழு உறுப்பினர்களாக 
அறிவித்து ,   AITUC  இன் பத்திரிக்கையான  
' TRADE  UNION  RECORD' பிரசுரித்துள்ளது . 
அதன் நகலை கீழே அளித்துள்ளோம். 

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின்  தோழர். தா. பாண்டியன் ,
K . சுப்பராயன் , S .S . தியாகராஜன்,   குருதாஸ் தாஸ் குப்தா,
A .B . பரதன்  ஆகியோர் பெயர்களுடன்  பொதுக் குழு 
உறுப்பினராக  தோழர். S .S . மகாதேவையா  பெயரும் 
பிரசுரிக்கப் பட்டுள்ளது . இணைக்கப் பட்ட FEDERATIONS  
பட்டியலில் அதன் பொறுப் பாளராக ' மகாதேவையா'  
பெயர் வந்துள்ளது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .  

இப்படி  'தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன்' என  
மகாதேவையாவுக்கு பிடித்த அரசியல் கட்சியுடன் 
நம்மை இணைத்திடவா  நாம் செந்நீர் சிந்தி இந்த 
சங்கத்தை வளர்த்தோம் !   காலம் காலமாக  கட்சி 
சார்பற்ற சங்கம் என்று நாம் கூறி ஊழியர்களை 
ஒன்று படுத்தி  வைத்திருந்த நிலையை இன்று
மகாதேவையா வேறுபடுத்தி விட்டதை  
இன்னும்  ஏற்கத்தான் போகிறார்களா  அங்கிருப்போர் ?

இப்படியே போனால்  AIPEDEU  வின்  உத்திர பிரதேச
மாநிலச் செயலர்  சமாஜ் வாடி கட்சியுடன்  அந்த 
மாநிலச் சங்கத்தை இணைப்பார் .... ஒரிஸ்ஸாவில் 
உள்ள AIPEDEU  மாநிலச் செயலர்  பிஜு  ஜனதா  
தளத்துடன்  அந்த மாநிலச் சங்கத்தை இணைப்பார் .  
பீகாரில்   நிதிஷ் குமாரின்  ஐக்கிய ஜனதா தளத்துடன் 
அந்த மாநில AIPEDEU  இணைக்கப் படும். 
தமிழகம் மட்டும் சளைத்ததா என்ன  என்று கூறி  
இங்குள்ள 'ஜாம்பவான்கள்'   தி. மு.க. வின்  PEPU  
சங்கத்தில்  இங்குள்ள AIPEDEU  சங்கத்தை  இணைப் பார்கள் .

இப்படியே போனால்  என்னாகும் ? அரசியல்  
கட்சிகளின் அடி வருடிகளைத்தான் நாம் பார்க்க 
முடியும் ....   நம்  தலைவர்களின் தியாகத்தால் வளர்ந்த 
சங்கம் சிதையுண்டு போகும்.  
இதனை ஏற்பீர்களா தோழர்களே ? அல்லது 

மகாதேவையாவைத் தூக்கி எறிந்துவிட்டு  ... NFPE 
பதாகையை உயர்த்திப் பிடிப்பீர்களா ?  
இன்னமும் AIPEDEU  சங்கத்தை நம்பியுள்ள 
சாதாரண அடிமட்டத் தோழர்களே !  
அதனை ஆதரிக்கும் தோழர்களே ! 
இந்தக் கேள்விகளை எல்லாம் 
 உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம்! 

இனியும் காலம் தாழ்த்தாது AIPEDEU  
சங்கத்தில் இருந்து விலகிடுவீர் !
NFPE  பேரியக்கத்தின் அங்கமான  
AIPEU  GDS (NFPE )  இல்  உடன் இணைந்திடுவீர் !
வாருங்கள் தோழர்களே !  
கரம் ஒன்று  சேர்ப்போம் ! 
களம் இனி ஒன்றாய் காணுவோம் !

தோழமையுடன் 
R . தனராஜ் , மாநிலச் செயலர்.



No comments:

Post a Comment